டுசு
வடிவேல் முருகா வாய்த்த நின் ஆணையை
அடியர் இவர்க்கும் அருளினை என்னே!"
என்றுபா ராட்டி இருமொழிப் புலவரின்
'முழுமுதற் பொருளாம் முருகன் பொருள்பெற
வழிசொலா திருப்பனோ? அவன் சொலும் வழியை
அடியன் இவனுக் கறைதல் ஒல்லுமோ?
என்னலும், புலவர் 'எழில்வேல் முருகன்
போற்றத் தக்கன; பொருந்திய நெஞ்சம்
ஏற்றுளோம் ஆதலின் இசைத்தநல் வழியை
நும்மிடம் புகல இம்மியுந் தடையிலே’
என்று கூறி எதிர்வெளி நிலத்தில்
ஒன்றும் தோன்றா உளத்துட னிருந்த
சாமியை நோக்கிச் சாற்றினர் புலவர்;
வெள்வேல் முருகற்கு மிகவும் உகந்தது
வள்ளல் கைவேல் வெள்வே லன்றோ?
அம்மரம் விரும்பினன், அதனைக் காட்டி
அதன்கீழ்த் திசையில் ஆறு முழத்தில்
பதமுற ஆழந் தோண்டிப் பார்ப்பின்
பசும்பொன் அங்கே பதுங்கிக் கிடக்கும்.
றருளிச் செய்தனன் ஆறு முகத்தான்
என்றதும் மகிழ்ச்சி ஏகிய முகத்தில்
துன்றும் வருத்தந் தோன்ற இருந்த
துறவியை நோக்கித் தொழுதகு பெரியீர்!