தூய்மை காவாச் சொல்லெழுத் தாளர்
அ.உ அறியா அயல்மொழிப் பறைஞர்
புலமை பெருக்காப் புல்லிய புலவர்
புலவரைப் போற்ருச் சிலவரைப் பதவியர்
இழுக்கம் பரப்பும் ஏதிலார்க் கெல்லாம்
வழுக்கம் தவிர்க்கும் வாய்ப்பிடி யாதலின். 28
ஊன்றுகோல் என்னும் ஒண்கதிர்க் காப்பியும்
சான்றுநூ லாகச் சடுதியிற் பாடினன்
பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன்
மூடப் பழக்கஞ் சாடிய பாவலன்
தூண்டுகை போலும் தொடர்பின் எனது
வேண்டுகை ஏற்று விருந்தியம் படைத்தனன் : 34
இலக்கியம் நிலமா இலக்கணம் அரணாக்
கவிதை கோலாக் கற்பனை கொடியா
வெல்க தமிழெனும் விறற்கொடி பொறியா
யாப்புப் படையா நல்லணி துணையாப்
புரட்சி முரசாப் புதுமை துடியாத்
தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையா
அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத்
தொடுமொழிப் போரில் தும்பை சூடியோன்
மொழியர சோச்சும் முதல்முடி யரசன் - குடியரசு
போற்றுங் கொள்கை யோனே 44
கதிரகம், காரைக்குடி
க ஆடி உயகசு
17-7-1983