பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியக் காதை

௯௯



ஆங்கிலங் கற்றோர் தாமே
அமர்வதற் குரிய ரென்ற
பாங்கினில் ஒழுகும் நாட்டில்
பைந்தமிழ் தேர்ந்த செம்மல்
ஓங்குபே ராசா னாகி
உயர்பெரும் பொறுப்பைத் தாங்கி
ஈங்கினி தாட்சி செய்தார்
இணையிலை என்னு மாறே. 24

நிறைதரு புலமை யாட்சி
நீடிய புகழின் மாட்சி
குறியுடன் பதவி யாளுங்
கூர்மதி யனைத்தும் நோக்கி
அரசரும் வியந்து போற்றி
அன்பினைப் பொழிந்து நின்றார்;
அறிவுடை ஒருவன் தன்னே
அரசனும் விரும்பும் அன்றே! 25

பண்டுநற் புலவர் தம்மைப்
பாருல காண்ட வேந்தர்
கண்டுளத் தன்பு பூண்டு
காத்தனர் தமிழுக் காக;
பண்டித பணியை எங்தள்
பைந்தமிழ்ப் புலவர் தம்மைக்
கண்டுளத் தரசர் தாமும்
காத்தனர் தமிழுக் காக. 26


1. செட்டி நாட்டரசர் 2.கற்கண்டு போன்ற உள்ளம்