௧௰௨
ஊன்றுகோல்
பாட்டரங்கம் தமிழ்நாட்டில், அரங்க மேறிப்
பாடுபவன் தமிழன்தான்; அந்தப் பாட்டைக்
கேட்டிருக்கும் அவையினரும் தமிழ மாந்தர்;
கீர்த்தனையாம் கிருதிகளாம் இவையே கேட்கும்.
நாட்டமொடு வந்தவர்க்கோ விளங்க வில்லை
நாமினியும் பொறுத்திருந்தாற் பயனே யில்லை
வேட்டெழுந்து தமிழ்வேண்டும் என்று சொன்னொம்
6
இசைக்கிளியை மொழிக்கூண்டில் அடைக்க வேண்டி
எழுகின்றார் என்றுநமைப் பழித்துச் சொன்னார்
இசைக்குயிலைத் தமிழ்வானில் பறக்கா வண்ணம்
இறகொடித்துப் பிறமொழிக்குள் அடைத்து விட்ட
வசைக்குரியார் யாவரெனத் தெரியா வண்ணம்
வழிமாற்றித் திசைதிருப்பிக் காட்டி விட்டுத்
தசைப்பிண்டத் தலையாட்டிப் பொம்மை முன்னர்த்
7
கொடுமையிது கொடுமையெனக் கொதித்தெழுந்து
கொடையண்ணு மலையரசர் 'பத்துப் பாட்டில்
விடுகஇனித் தமிழ்ப்பாட்டிற் காறி டங்கள்
வேற்றுமொழிப் பாட்டுக்கு நான்கி டங்கள்
தடைஎனவோ இதற்கு’மெனத் தமிழர் சார்பில்
தமிழ்நாட்டில் தமிழரசர் பிச்சை கேட்டார்
கெடுமதிய ரதன்பின்னு மிரங்க வில்லை
8
”