பொதுப்பணிபுரி காதை
௧௰௩
நம் முன்னோர் தேடிவைத்துத் தொன்று தொட்டு
நமக்குரிமை யாகிவரும் வீட்டில் வாழ
வம்பென்ன ? வழக்கென்ன ? அந்த வீட்டில்
வாடகைக்கோ ரிடங்கேட்டோம் எவனி டத்தோ!
அம்மொழியார் விரும்பவில்லை தடைக்கல் லானர்
அடஇனியும் பொறுப்பதுவோ? உரிமை காக்க
இம்மண்ணிற் சிறுபுழுவும் முயலு மன்ருே
9
மாற்றிதற்குக் காண்பதற்கு நினைந்த அண்ணா
மலையரசர் இயக்கமொன்று தமிழி சைக்குத்
தோற்றுவித்தார்; நல்லவர்கள் ஒத்து ழைத்தார்;
துணைநின்று பணிபுரிந்த இதழும் உண்டு
சாற்றைநிகர் மொழிப்புலவர் துணிந்து வந்து
தகுமுறையால் தமிழிசைக்குத் தொண்டு செய்தார்;
வேற்றுமொழிப் புலமையிலும் வீறு பெற்று
10
நாடுமுழு தெங்கனுமே தமிழ்மா நாடு
நடத்திவரும் அரங்குகளில் தலைமை யேற்றார்;
ஏடுகளில் விளக்கங்கள் பிறர்க ருத்துக்
கெதிர்ப்புரைகள் என்றெல்லாம் எழுதி வந்தார்;
"பாடுவது தமிழானால் என்ன தீமை
படர்ந்துவிடும் ? ஏனச்சம் ? யாருக் கென்ன
பாடுவரும் ? தமிழாலே தமிழர் நாட்டில்
11