பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொதுப்பணிபுரி காதை

௧௰௩

நம் முன்னோர் தேடிவைத்துத் தொன்று தொட்டு
நமக்குரிமை யாகிவரும் வீட்டில் வாழ
வம்பென்ன ? வழக்கென்ன ? அந்த வீட்டில்
வாடகைக்கோ ரிடங்கேட்டோம் எவனி டத்தோ!
அம்மொழியார் விரும்பவில்லை தடைக்கல் லானர்
அடஇனியும் பொறுப்பதுவோ? உரிமை காக்க
இம்மண்ணிற் சிறுபுழுவும் முயலு மன்ருே

இனிநமக்குத் தமிழரெனும் பெயர்தா னேனே.

9



மாற்றிதற்குக் காண்பதற்கு நினைந்த அண்ணா
மலையரசர் இயக்கமொன்று தமிழி சைக்குத்
தோற்றுவித்தார்; நல்லவர்கள் ஒத்து ழைத்தார்;
துணைநின்று பணிபுரிந்த இதழும் உண்டு
சாற்றைநிகர் மொழிப்புலவர் துணிந்து வந்து
தகுமுறையால் தமிழிசைக்குத் தொண்டு செய்தார்;
வேற்றுமொழிப் புலமையிலும் வீறு பெற்று

விளங்குகதி ரேசருக்கும் சரிபங் குண்டு.

10



நாடுமுழு தெங்கனுமே தமிழ்மா நாடு
நடத்திவரும் அரங்குகளில் தலைமை யேற்றார்;
ஏடுகளில் விளக்கங்கள் பிறர்க ருத்துக்
கெதிர்ப்புரைகள் என்றெல்லாம் எழுதி வந்தார்;
"பாடுவது தமிழானால் என்ன தீமை
படர்ந்துவிடும் ? ஏனச்சம் ? யாருக் கென்ன
பாடுவரும் ? தமிழாலே தமிழர் நாட்டில்

பாடுவது தவறென்றால் என்ன நீதி?"

11