பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௰௪

ஊன்றுகோல்

பண்ணமைத்த தேவாரப் பாடல் கேட்டால்
பரமனுக்கும் நெஞ்சுருகும்; செவிம டுத்தோர்
எண்ணத்தை நெக்குருக்கும்; இராம லிங்கர்
இயற்றியநல் லருட்பாடல் தேனும் கைக்கும்
வண்ணத்தை உருவாக்கும்; அயன்ம தத்தில்
வருவேத நாயகனர் வழங்கும் பாடல்
கண்ணுெத்த சமரசத்தைப் படைத்துக் காட்டும்;

கனியிருக்கக் காய்கவர்தல் மடமை யன்றோ'

12



"தாண்டவனர்1 பதமிருக்கப் பிறபாட் டுக்குத்
தாளங்கள் இடல்முறையா? கையில் பையில்
வேண்டுபொருள் நிறைந்திருக்கக் கடனுக் காக
வேற்றவர்.பின் தொழுதுசெலல் சரியா? பத்தி
வேண்டுமெனில் விளங்குமொழிப் பாடல் வேண்டும்;
விளங்காத மொழிகேட்டால் உணர்வா தோன்றும்?
நீண்டபுகழ் பாரதிகள் குஞ்ச ரங்கள்2

நிலைதமிழில் வீனுக்கா பாடிச் சென்றார்?"

13



இசைசுவைத்து மகிழ்வதற்கு மொழிவேண் டாவென்
றியம்புகின்றீர்; அறிவுடைய வாதம் அன்று:
வசைமிகுந்த பிடிவாதம் நீவிர் பாடும்
வடமொழியும் தெலுங்கிசையும் மொழிகள் என்ற
இசைவுமக்கு வரவிலேயோ? ஏனே இந்த
இழிசெயலை மேற்கொண்டீர்? தமிழில் மட்டும்
நசைவிடுத்த காரணமென்? உங்கள் வாழ்வின்
நலிவுக்குத் தமிழ்செய்த தீமை என்ன? ”

14

1. முத்துத் தாண்டவர்

2.பாரதிகள் குஞ்சரங்கள் - சி. சுப்ரமணிய பாரதியார், கவிகுஞ்சர பாரதியார் போன்றோர்