பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௰௬

ஊன்றுகோல்

“உண்பதும் ஒய்வதும் என்பயன்
தந்தன உற்றறிவால்
எண்ணுக நற்பணி செய்திட
நண்ணுக என்றிசைத்தே
வண்முகில் போலுளங் கொண்டவர்
வாழ்1 பல வான் குடியில்
கண்மணி வாசகச் சங்கமென்

ருென்றனைக் கண்டனரே.

18



காட்டைத் திருத்திக் கலைகள்
பலதேர் கழகமென
நாட்டிற் றிகழ்தர அண்ணா
மலைகண்ட நன்னகரில்
வேட்டு மணிவா சகமன்றம்
கண்டு வியாழன்தொறும்
பாட்டின் நலத்தாற் பயனளித்

தார்மணிப் பண்டிதரே.

19



ஆங்கிலங் கற்றவர் ஆர்வலர்
இந்தமிழ் ஆய்ந்திடவே
ஓங்கிய இல்லையில் ஒர்கழ
கங்கண் டுயர்வுபெறும்
பாங்கினில் ஞாயிறு தோறும்
புகட்டினர் பாவமுது
தேங்கிய நற்சிலம் பாகிய

தேனினைப் பண்டிதரே.

20

1. பல்வான்குடி குன்றக்குடிக்கு பக்கத்தில் உள்ள ஊர்