இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12. விருதுபெறுகாதை
“செந்தமிழ் நூலிற் செறிதரு புலமையும்
வடமொழி நூலில் வன்மையும் தெளிவும்
சமய நூல்களிற் சார்பொருள் உணர்வும்
அமையும் செவ்விய ஆற்றல் கண்டோர்,
இயங்கு நூலகம் எனுங்கதி ரேசர்க்கு
5
பிறர்க்கு விருதுகள் தரற்குரி யார்க்குச்
சிறப்புறும் விருதுகள் சேர்த்தனர் ஆசையால்;
பலப்பல பட்டங் கிடைத்தன வாயினும்
10
பண்டித மணியெனும் பட்டம் ஒன்றே
எண்டிசைப் பரவி ஏற்றம் தந்தது.
கவிமணி, பாரதி, கலைஞர் என்பன
அவரவர் பெயராய் அமைந்தன போல
15
இயக்கம் பெற்ற தெங்கணும் பரந்தே;
இருமொழி நூலுட் பெருகிய புலமும்
ஒருசபை வளர ஊக்கிய தொண்டும்”