பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ககஅ

ஊன்றுகோல்


முதனூலிற் கண்டதனை முகந்து கொண்டு
மொழிதமிழிற் குறையாது கொடுத்து மேலும்
அதனோடும் அசையேனும் கூடா வண்ணம்
அளந்தெடுத்து வழங்குமிவர் சொல்லிற் செட்டும்
சிதையாத பொருள்நிறைவும் காணுங் காலை
சீர்தூக்கும் வணிகர்குல அழகைக் காட்டும்;
கதிரேச மணியாரின் மொழிபெ யர்ப்பைக்
கண்டதிரு பாரதியார் [1] உரைத்த தீர்ப்பு.5

வல்லவர் போற்ற வடமொழி நூலை
நல்லியற் றமிழில் நயந்து தந்த
பண்டித மணியார் இன்னும் பலப்பல
தண்டமிழ் மொழியில் தருதல் மேவினர்;
சுக்கிர நீதி சுலோசனை மற்றும்5
உதயண சரிதமும் உவந்து தந்தனர்;
மாலதி மாதவம் முதலன யாத்தும்
சால மகிழத் தந்தனர் நமக்கே.

ஆழ்ந்தகன்ற நுண்ணறிவு, நூலாசான்
அகக்கருத்தை உணரும் ஆற்றல்,
போழ்ந்துபுனல் எதிரேறும் ஒடம்போற்
புகுந்ததனுள் உண்மை தேறல்,
வாழ்ந்தவுல கியலறிவு, மொழிப்பயிற்சி,
வளர்ந்தபல நூற்ப யிற்சி,
ஏய்ந்தவரே ஒருநூலுக்குரையெழுத
ஏற்புடைய ராவர் என்ப1


  1. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார். குறையாது கொடுத்தலும் நல்வணிகர் இயல்பு