பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூல்தரு காதை



உரையெழுதும் பண்புநலன் அத்தனையும்
ஒருங்குடைய மணியார், தேங்கிக்
கரைபுரளும் அருளாளர் கசிந்துருகிக்
கண்மல்கி வாத வூரர்
தரைமகிழ அளித்ததிரு வாசகத்துள்
தனிநிலையிற் றோய்ந்து தோய்ந்து
நெறிமுறையில் உரைதந்தார் அவ்வுரையின்
நிலையுரைக்க எவரால் ஒல்லும் ?2

அணுவுக்குள் மறைந்திருக்கும் ஆற்றலினை
அளந்தறிய வல்லார் போலக்
கணுமிக்க கரும்புநிகர் சொல்லுக்குள்
கரந்திருக்கும் பொருளெ டுத்த
துணிவுக்கு வியந்துலகம் போற்றியது
சொலற்கரிய புலமை யுற்ற
திணிவுக்கு வாழ்த்தியது வாசகத்தின்
தெளிவுக்குள் திளைத்து நின்றே.3

கண்டுநிகர் சொல்லுக்குள் கடைந்தெடுத்துக்
காணுகின்ற நயங்கள் சொல்லி
மண்டுமதன் சுவைசொல்லி முறைவைப்பில்
மருவிவரும் நோக்கம் சொல்லிக்
கண்டபிற ஒப்புமையும் உடன்சொல்லிக்
காட்டிவரும் புலமை யாலே
பண்டையுரை யாசிரியர் வரிசைபெறும்
பண்டிதராய் விளங்கி நின்றார்.4