பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கஅஉ

ஊன்றுகோல்


“நடந்ததைஏன் மீண்டுமினி நினைக்க வேண்டும்?
நானெதுவுங் கருதவில்லை; நம்மனத்துட்
கிடந்ததைநாம் வெளிப்படுத்த மேடை ஏறிக்
கிளக்குங்கால் வேறுபடும் நிலைகள் அங்குத்
தொடர்ந்துவரல் முறைதானே அதனா லென்ன?
தொண்டுசெயும் பொதுவாழ்வில் இன்னோ ரன்ன
படர்ந்துவரும்” எனமொழிய அமைதி கண்டார்;
பண்பட்ட உள்ளத்திற் பகைமை ஏது?9

“மலையத்து நாட்டிலுள [1] இராம சாமி
மடலொன்று நலங்கேட்டு வரைந்தி ருந்தார்
நிலைபற்றி நானவர்க்கு மடல்வ ரைந்தேன்
நிலைத்திருந்து தருதுயரைக் கவிதை யாக்கி
அலைகடலுக் கப்பாலே உய்ந்து வைத்தேன்
அவர்மகிழ்ந்தார்” எனவுரைத்து மணிம
கிழ்ந்தார்;
அலைவுறுத்தும் பிணியுழந்தும் கவிதை தந்தார்;
அக்கவிதை ‘சீதநீர்’ எனத்தொ டங்கும்.10

பாடலதைப் பாடுங்கால் அவர்மு கத்திற்
படர்ந்துவரும் ஒளிகண்டோம்; இதழில்
முன்போல்
ஒடிநடம் பயில்கின்ற முறுவல் கண்டோம்;
உவகையொடு தெளிவினையும் விழியில்
கண்டோம்;
வாடவரும் பிணிமறந்து தமைம றந்து
வாய்மலர்ந்த மணிமொழியைக் கேட்டு வந்தோம்;
பீடுபெறு பெருமிதமும் தோன்றக் கண்டோம்;
பிணிதவிர்த்து நலமளிக்கும் தமிழே வாழி.11


  1. மகிபாலன்பட்டி சி.இராம.இராமசாமிசெட்டியார்