பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலைகாண் காதை

க௪௩


‘வருவன எவையும் சொல்லும்,
வல்லமை வாய்ந்த வேர்ச்சொல்
பெருகிய தமிழ்மொ ழிக்கட்
பிறமொழிச் சொற்க லந்து
சிறுமைகள் செய்து வாழ்தல்
செந்தமிழ்த் தாய்க்குச் செய்யும்
ஒருபெருந் தீங்கே யாகும்
ஒதுக்குக’ எனப்ப னித்தார்.12

'வையகம் ஈன்ற மக்கள்
முதன்முதல் வாய்தி றந்து
பையவே நாவ சைத்த
பைந்தமிழ் மொழியை யிங்குப்
பொய்யினால் வடமொ ழிக்கட்
பிறந்ததாப் புகல்வ ராயின்
மெய்யறி வில்லார் கூறும்
வெற்றுரை யதுவாம்’ என்றார்.13

'பிறமொழிச் சொற்க லந்து
பீடுறும் இலக்க ணத்தின்
வரன்முறை யழித்து விட்டு
வழுவுடன் எழுதி யிங்குத்
தருநடை எளிய தென்று
தமிழனே சொல்வ னாயின்
அறிவது தெளியும் நாளை
அவன்பெறல் வேண்டு மென்றார்.14