பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திகழ்கின்றமையையும் அவர் எடுத்துரைக்கும்போது, அவரது புகழுரை அவருக்கே சென்று சேர்வதும் புலகிைறது. அவர் படிக்கிற காலத்தில், அவருக்கு ஆசிரியராக, வழிகாட்டியாக இருந்த பலரை நினைவு கூர்கின்றார்.

“நலந்தந்த சங்கரரும் ஆட்டு வித்த
நடேசருமென் தெய்வங்கள்! நாளும் நாளும்
வலம்வந்தே அருள்பெற்ற கோவிலுக்குள்
மல்லிங்க சாமியொரு சாமி எற்குக்
குலம்தந்த தமிழ்தந்த முத்து சாமி
கும்பிட்டு நான்மகிழ்ந்து நத் துஞ் சாமி
உளம்தந்து பாருலகின் இயல்புங் காட்டி
உய்வித்த செல்லப்பர் மற்ருேர்
தெய்வம்' (3:33) ”

மேலைச்சிவபுரிச் சன்மார்க்கசபை போன்றவை தோன்றி, இளமை முதல் தாய்ப்பால் ஊட்டி வளர்ப்பது போல் தாய்மொழிப் பற்றையும் அறிவையும் ஊட்டி வளர்க்குமானால், இங்கு தமிழ் வளர்ச்சிக்குத் தடைகளே எழா எனலாம். நாடுமுழுவதும் இத்தகைய சபைகள், கழகங்கள் எழாவா என்ற ஏக்கத்தைக் கவிஞர் உரை தோற்று விக்கிறது.

“உள்ளத்துள் உணர்வூட்டிப் பற்றுண் டாக்கி
உண்மைபெறும் பத்தியுடன் தொண்டு செய்ய
மெள்ளத்தன் ளைாக்கிப் பாடல் வல்ல
மேலவர்தம் கூட்டத்துள் ஒருவனாக்கி
அள்ளித்தன் அருளெல்லாம் என்மேற் பெய்தாள்
அழியாத வரமளித்தாள் தமிழ்த்தாய், அந்தத்
தள்ளைக்கு நானடிமை யான திந்தச்
சன்மார்க்க சபையென்னும் கோவிலிற்றான்’
(3:32)”

கதிர் எழுந்து, மறைந்த ஒருநாள் நிகழ்ச்சி போல ஒரு வாழ்நாளைச் சொல்லும் இக்காப்பியம் கதிராரை மட்டும் காட்டிற்றிலது. அவர் காலத் தமிழகத்தின் ஒரு பகுதியையே காட்டி நிற்கிறது. சொல்வளமும் நடைநலமும் மிக்க இக் காப்பியம் பொருள் நிறைவும் உணர்வுச் செறிவும் மிக்கதாக மிளிர்கிறது. என்றுமுள தென்றமிழ் இன்றும் வளர்கிறது; இனியும் வளரும் என்பதைக் காட்டும் காலத்துக்கேற்ற காப்பியம் இதுவாகும்.