பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

இளமைக் காலத்தில் முருகனைப் பாடுவதே முத்தமிழ் கற்றதன்பயன் என்றிருந்த இவர் 1940-க்குப் பிறகுசமுதாயச் சூழல்-நாடு-மொழி இவற்றையே பாடிவருகின்றார். சூழ்நிலையின் தாக்கமும், சுயமரியாதை இயக்க வேட்கையும், பாவேந்தர்பால் கொண்ட பற்றும் கடவுள் மேலிருந்த கருத்தை மாற்றிக் காலத்தின் தேவையைப் பாடவந்த் கவிஞராக ஆக்கிவிட்டன.

கலப்பு மனத்தின் தேவையைப் பற்றிக் கவிதையல பாடிய இவர் தாமும் கலப்புமணம் செய்து கொண்டு தம் பிள்ளைகட்கும் கலப்பு மணம் செய்வித்துத் திம் கொள்கைக்கு வெற்றிதேடித் தந்துள்ளார். "அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்த பெருமை இவர்க்குண்டு.

சாதிசமயங்களுக்குள் ஆட்படாமை-நன்றி மறவாமை-நட்பைப் பேணல்-கொள்கைப் பிடிப்பு-குறிக்கோள் வாழ்வு-உதவும் உள்ளம்-ஒட்டார் பின் செல்லாமை-ஆசிரியர்ப் போற்றல்-ஆகியன இவர்தம் இயல்பிற் சில.

"சங்கப் புலவர் தம் பாடலே பாடல்" என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடைய இவர் பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனரைத் தந்தையாகவும் கருதிக் "குலமுறை கிளத்தும்" கொள்கையுடையராக விளங்குகிறார்.

பெரும்பாலும் "தன்னை மறந்த லயம் தன்னில்" இருக்கும் இயல்பினர். "புட்டி" களின் துணையால் அன்று; எட்டியவரை சிந்திக்கும் இயல்பினால். கனவிலும் கவிதை பாடுவது என்பது இவருக்கே உள்ள தனித் திறனாகும். கனவிற்பாடிய கவிதையை மறுநாள் காலேயில் எழுந்து வரிமாறாமல் எழுதிவிடும் இவரது ஆற்றல் வியப்புக்குரியது. இஃது இயற்கை வழங்கிய அருட்கொடை என்றே கூறல் வேண்டும்.

"அழகின் சிரிப்பு" என்ற இவர்தம் கவிதை 1950ஆம் ஆண்டு கோவையில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் முதற் பரிசுக்குரியதெனப் பாவேந்தர் பாரதிதாசனுல் தேர்ந்தெடுக்கப்பெற்ற சிறப்பினையுடையது.