பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கதிரெழு காதை




உலகெலாம் உய்ய வைக்கும்
உயரிய கொள்கை யாவும்
நிலவிய தொகையும் பாட்டும்
நிகழ்த்திய சங்கம் ஏறி
அலகிலாப் பெருமை பூண்டாள்
அன்னையாம் தமிழ ணங்கின்
மலருலாம் அடிகள் வாழ்த்தி
மகிழ்வுற மனத்துள் வைப்பாம் 1

யாதும் நம் ஊரே யாகும்
யாவருங் கேளிர் என்னும்
கோதிலாக் கொள்கை முற்றுங்
குறித்திடும் பாட லொன்றை,
ஓதுவார் உள்ள மெல்லாம்
உவந்துவந் தேத்தும் வண்ணம்
ஓதினன் கணியன் என்னும்
ஒப்பிலாச் சங்கச் சான்ருேன் 2