பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கதிரெழு காதை 


திரைவழி கடந்து சென்று
திறமையால் ஈட்டு வாரும்
செறுவழி உழுது செல்வம்
சேர்த்ததை உதவு வாரும்
தருவழி யறிந்து செல்வம்
தக்கவர்க் கருளு வாரும்
ஒருவழி அறமே யாக
உலவிடும் நல்லூர் அவ்வூர் 6

இளஞ்சிறார் பயிலும் பள்ளி
இருப்பதங் கொன்றே ஒன்று
புழங்குவார் இருவர் மூவர்
போய்வரும் தெருவி ரண்டு
வழங்கிடும் கடைகள் மூன்று
வடிவினிற் சிறிய வாகும்
அளவுவார் மக்க ளீட்டம்
ஆயிரத் தைந்நூ றாகும் 7

உருவினிற் சிறிய தவ்வூர்
உளத்தினாற் சிறந்த மாந்தர்
மருவியங் குறைத லாலே
மதிப்பினில் உயர்ந்த தாகும்
உருவுகண் டெள்ளல் வேண்டா
ஓதுவ தறநூல் அன்றோ ?
உரியவர் நல்ல ரானால்
ஒருநிலம் நல்ல தாகும் 8