பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊன்றுகோல்

நடந்தன ஆண்டு மூன்று
நயந்துணி விலைகள் பேசித்
தொடர்ந்தது விற்கும் செய்கை
துணிபடு மாறு, தந்தை
கடந்தனர் வாழ்வை என்ற
கடுந்துயர் தருஞ்சொற் கேட்டுப்
படர்ந்தனன் விரைந்து தன்னைப்
படைத்ததாய் நாட்டை நோக்கி 15

தந்தைதாம் பிரிந்தார். ஆனால்
தமிழெனும் தாயைக் காக்க
வந்திவண் தங்கி விட்டான்
வாழ்வுக்கு வழியைத் தேடிச்
சிந்தையைப் பறக்க விட்டான்
சிலபகல் கழிந்த பின்னர்
வந்தது மீண்டும் வாதம்
பறந்திட வழியே யில்லை 16

முற்றிய வாத நோய்தான்
முழுவலி கொண்டு தாக்க
வற்றிய காலைப் பெற்றான்
வளர்கதி ரேசன் அந்தோ!
பெற்றவள் அதனைக் கண்டு
பெருந்துயர் உற்றா ளேனும்
பற்றுளங் குறைய வில்லை
பரிவினைச் சொரிந்து நின்றாள் 17