பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைபயில் காதை

கஎ



அரும்பிய புலமை யாற்றல்
அழகிய மொட்டும் ஆகி,
விரும்பிய போதும் ஆகி,
விளைந்திடும் நறவம் மாந்தச்
சுரும்பினம் மொய்க்கும் வண்ணம்
தூயநன் மலரும் ஆகி
விரிந்தது; மணமும் சற்றே
வீசிடத் தொடங்கிற் றங்கே24

கவர்மணம் நுகர்ந்த மாந்தர்
களித்தனர் புகழ்ந்து நின்றார்:
அவனெனும் சொல்லை மாற்றி
அவரென அழைக்க லுற்றார்,
நவையுறு கால்கள் எங்கும்
நடந்திட இயல வில்லை;
குவிதரும் புகழோ யாண்டும்
குலவிட நடந்த தங்கே25

பொறியின்மை கண்டு நெஞ்சம்
புழுங்கிலர், நாளும் நாளும்
அறிவறிந் தொழுகல் வேண்டி
ஆள்வினை உடைய ராகி
நெறியிலே நடந்து வந்தார்;
நிலைபுகழ்க் கலைகள் கற்கும்
குறியிலே குறையா ராகிக்
கூடிய ஆர்வங் கொண்டார்26