பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணம் புணர் காதை


உலகியல் நன்கு தேர்ந்தார்
இவரைப்போல் ஒருவ ரில்லை;
கலைபயில் அறிவும் அந்த
உலகிய லறிவுங் கண்டோர்
துலையினில் துரக்கிப் பார்ப்பின்
மிக்கது தோன்றா ராக
அலைபடும் மனத்த ராவார்.
அவ்வணம் தெளிந்து நின்றார் 24


மேற்கணக்காய்க் கீழ்க்கணக்காய் மேவுபதி
னெண்கனக்குங் கற்றுத் தேர்ந்தார்;
பார்த்தலத்தில் வரவுபற்றுப் பார்க்கின்ற
பணக்கணக்குங் கற்றுத் தேர்ந்தார்:
மேற்புலத்தாற் றெளிவுபெறல், மிகுதிருவால்
மேம்படுதல் வெவ்வே றென்ற
[1] நாற்கணக்கை மாற்றிவைத்த இவர்திறத்தை
நுண்ணறிவை வியவார் யாரே? 25


  1. இருவே ஐவகத் தியற்கை என்ற குறளின் கருத்து