பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5.நெறியுணர் காதை



போராடிச் செங்கதிரோன் தோன்று முன்னர்ப்
புலர்காலைப் பொழுதத்துக் கடமை யாற்றி,
நீராடி வெள்ளியமெல் லாடை பூண்டு,
'நீறாடி மலரடியை நினைந்து, நெற்றி
நீறாடி மெய்யெல்லாம் பொலிந்தி ருக்க,
நிறைமொழிகள் சிலசொல்லி வணங்கிப் பின்னர்
யாரோடும் உரையாடல் முதலாம் செய்கை
யாவையுமே செய்துவரல் அவர்வ ழக்கம் 1

தேவாரம் ஒதுபவர்க் கானின் மூவர்
திருமுறையுள் அப்பர்தரும் "மாசில்வீணை'
நாவாரப் பாடுகவே பாடு கென்று
நயந்துரைப்பார், அப்பாடல் இசைக்குங் காலை
மீவானில் வெண்மதியம் ஊர்ந்து செல்ல
வேனிலிளம் பருவத்துத் தென்றல் வீசப்
பூவாரும் பொய்கையினுட் குடைந்து வந்த
புத்துணர்வு கொண்டவர்போல் திளைத்தி ருப்பார்2


1. திருநீறு பூசும் சிவன்