பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெறியுணர் காதை

௪எ


கற்கோவில் வலம்வந்து சிலையில் நிற்கும்
கடவுளரை வணங்கலினும் அடியார் செய்த
சொற்கோவில் வலம்வந்து, தடையே யின்றித்
துணிந்தெழுந்து கருவறைக்குட் புகுந்து சென்று
முற்கானுஞ் செம்பொருளைக் கண்டு கண்டு
மூழ்குவதில் வணங்குவதில் இன்பங் கண்டார்;
தெற்கோதும் திருமுறையுட் பேறு பெற்ற
திருவுடையார் அருளுடையார் இவரே யாவர் 9

கடையிரவு கழிந்தபினர் விழிம லர்ந்து
கனிவுதரும் வாசகத்தை விரித்து நெஞ்சில்
இடையறவு படாவகையில் ஒதி ஒதி
இறைவனடி நினைந்துருகி மகிழ்ந்து பின்னர்
மடலெழுதும் மெய்யன்டர் மகிழு மாறு
மறவாமல் அவ்வவர்க்கும் ஏற்ற பாங்கில்
விடையெழுதும் இயல்பதனேக் கடமை யாக
விடையுடையன் அடிபரவும் தொழும்பர்
கொண்டார் 10

ஒருபாதி உமையவட்குத் தனது மெய்யில்
இடமளித்த ஒருவனடி உளத்திற் கொண்டார்,
ஒருபாதி தமதுளத்திற் செந்த மிழ்க்கும்
ஒருபாதி சிவநெறிக்கும் இடம ளித்தார்.
இருவேறு மொழியுணர்ந்தும் உளத்திற் றோய்ந்த
இனியதமிழ் மொழியாலே தொழுது வந்தார்;
திருவாத ஆரர்மொழி மூவர் ஒதும்
திருமொழிகள் இவர் நெஞ்சை யுருக்கி நிற்கும் 11