25
சட்டுத் தரேன்னு சொன்குங்க என்ருன் அந்தத் திண்டிவனத்து ஆள்.
"நான் பாங்க்கா வச்சிருக்கேன்? ஆண்டிகிட்டே ஏது பனம்?’
சைக்கிளில் பக்கிரி வந்தான். அவன் முக த்தில் அவசரம் தெரிந்தது.
சற்று தூரத்தில் ஒரு காலை பெடலில் வெத்தபடியே "தரீங்களா... என்று கேட்டான். -
சாமியார் எடுத்துக் கொடுத்தார். பக்கிரி அதிலிருந்து நூறு ரூபாய் நோட் ஒன்றை உருவி சாமியாரிடம் கொடுத்துவிட்டு வேகமாய்ப் போய் விட்டான். திண்டிவனத்து ஆசாமியை எதிரில் வைத்துக் கொண்டு சாமியாரால் அதிகம் பேச முடியவில்லை. -
"இந்தா நூறு ரூபா இருக்குது. புள்ளேயார் கோயில் கட்டறதுக்குன்னு கொடுத்தான். எடுத்துட்டுப் போய்க் கொடு. குளந்தீங்கல்லாம் நல்லாருக்குதா? ஜாரிச்சேன்னு சொல்லு.” 3 -
திண்டிவனம் ஆள் போய் விட்டான். குமாரு வந் தான். சாமியார் ஒமேகாவைப் பார்த்தார். அதை மறந்து போய்க் கையில் கட்டியபடியே தலைமுழுகியி ருந்தது அப்போதுதான் தெரிந்தது.
"இன்ன ஆச்சுடா வனஜாவுக்கு? -குமாருவைக் கேட்டார் சாமியார்.
"வாயிலெடுத்துட்டுதான் இருக்காங்க...” *சரியாயிடும்...' "இந்தாங்க, வனஜாம்மா குடுத்திட்டு வரச் சொன் ளுங்க” எவர்சில்வர் டியன்பாக்ஸைச் சாமியாரிடம் கொடுத்தான் குமாரு.