பக்கம்:ஊரார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

狩魔 "அப்புறம் என்ன சாமி வேணும்?" "இந்தப் பிள்ளையார் கோவிலை ஒரு வாரத்துக்குள்ளே கட்டி முடிச்சுடனும். வீட்டுக்கு ஒரு ஆள் வந்து வேலை செய்யனும், கோயிலைக் கட்டி முடிச்சுப்புறம்தான் நான் கிளம்புவேன். 'இவ்வளவுதானே? அப்புறம் ஒண்ணுமில்லையே! உங்க இஷ்டப்படியே இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே கட்டிக் கொடுத்துடருேம், போதுமா?" "இன்ஞெரு சங்கதி. கொள்ளைக் காரங்க ஒரு வேளை என்னைக் கொன்னு பாடியைக் கொண்டு வந்து இத்த ஊர்லேயே போட்டுடருங்க அப்ப என்ன செய்விங்க?" "நாங்களே உங்க அந்திமச் சடங்குகளையெல்லாம் செய்து முடிச்சுடருேம்." "அனதைப்பொணம் தானேன்னு அலட்சியப் படுத்து வீங்களே, உயிரோடு இருக்கிறபோதே இந்த கதின்ன...?" "ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டோம். நீங்க எப்படி செய்யச் சொல்றீங்களோ அப்படியே செய்ருேம். "பூப்பல்லக்கு ஜோடிக்கணும்.” 'ஜோடிக்குருேம் 多斜 "மேளம், பாண்டுவாத்தியம், திாரை தப்பட்டை எல்லாம் ஏற்பாடு செய்யணும்.” "செய்யருேம்.” பன்னீர் தெளிக்கனும்: 'தெளிக்கிருேம். 'சந்தனம் பூசணும்.” 'பூசளுேம்,'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/72&oldid=758759" இலிருந்து மீள்விக்கப்பட்டது