பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம் கண்கொள்ளாக் காட்சி அவளுக்கு.

"ஏபாப்பா!” என்ற குரல் அவளை உலுக்கியது. "அப்படி நிற்காதே. உட்காரு”.

அவள் இறங்கி நின்று, தலை நிமிர்ந்து பார்த்தாள். பெரியவர் ஒருவர் நல்லது எண்ணிப் பேசினார். ஆனால் வள்ளிக்கு அவர் பேச்சுப் பிடிக்கவில்லை.

“இங்கே யாரும் பாப்பா இல்லை, ஆமா. நான் காசு குடுத்திருக்கேனாக்கும்” என்றாள்

கண்டக்டர் முன் வந்தான். “நீங்க பெரிய அம்மா ஆச்சுதுங்களே. பாப்பா வந்து தனியா டவுணுக்குப் போகக் காசு எடுத்துக்கிட்டு வர முடியுங்களா?” என்றான்.

வள்ளி அம்மை அவனைக் கோபமாகப் பார்த் தாள். "நான் ஒன்றும் அம்மா இல்லே. ஆமா.... நீ இன்னும் எனக்கு டிக்கட் தரலே" என்றாள்.

“ஆமா" என்று அவள் தொனியில் அவன் உச்சரிக்கவே மற்றவர்கள் சிரித்தார்கள். அவளும் சிரித்தாள்.

அவன் டிக்கெட்டைக் கிழித்து அவளிடம் கொடுத்தான். “ஜோரா ஸீட்டிலே உட்காரு. நீதான் காசு கொடுத்திருக்கிறியே. ஏன் நிற்கணும்?" என்

"உங்கிட்டே ஒண்ணும் கேட்கலே. ஆமா” என்று தலையை தோள்மீது இடித்தாள் வள்ளி.

“நின்றால், பஸ் ஆடுற ஆட்டத்திலே நீ தவறி விழ நேரலாம். மண்டை உடையலாம். அதுக்காகத் தான் பாப்பா ....”

"நான் பாப்பா இல்லேங்கிறேன், நீ என்னா? எட்டு வயகப் பொண்ணு மாதிரியா இருக்கும் பாப்பா?" என்று வெடுவெடுத்தாள் அவள்.