பக்கம்:எக்கோவின் காதல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

"ஆம்; என் வரையில் அப்படித்தான். என் நாட்டு மக்கள்- என் இனத்தவர் அடிமைப்பட்டு, மாற்றான் காலடியில் மடிந்து கிடப்பதைக் கண்டு என் நெஞ்சு கொதிக்கிறது. அவர்களின் நலத்தைக் கருதி விடுதலை வேட்கை ஊறி கிடக்கும் என் நெஞ்சத்தில் காதலுக்கு இடமில்லை. என் கழுத்து மண மாலையைத் தாங்காது. நாட்டின் விடுதலைக்காகத் துக்குக் கயிற்றை வேண்டுமானால் மகிழ்வுடன் தாங்கும். உங்கள் எண்ணத்தை விட்டுவிடுவதுதான் நல்லது” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது அவன் கண்கள் அவள் கன்னத்தைவிட அதிகமாகச் சிவந்திருந்தன.

"சரி! நான் நாளைக் கூட்டத்திற்கு வருகிறேன்; நீங்கள் போய்வரலாம்! என்று விடை தந்தாள். மதுரம் கண்ணீர் சொட்டுவதை அவன் பார்க்கவில்லை. சென்று விட்டான்.

"அப்பப்பா பட்டணத்தில் குடியிருக்க இடம் கிடைத்தாலும் இவர் உள்ளத்தில் இடம் கிடைக்காது போல் இருக்கிறதே" என்று எண்ணிக் கொண்டே படுத்து விட்டாள்.

கிருஷ்ணனுக்கு நல்ல 'சந்தர்ப்பம்' கிடைத்தது. 'காந்தி சங்க'த்தி ற்கு விரைந்து சென்றான். “நாளைக் கருப்புச் சட்டை ஊர்வலம் நடக்கப்போகிறதாம். என்ன அட்டகாசம் செய்கிறார்கள்! நாளைக்கு இவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும். என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று அங்கு இருந்தவர்களோடு 'மந்திரலோசனை' செய்தான்.

ஒருவர் "அவர்கள் கூட்டம் நடத்தினால் நமக்கென்ன? நமக்கு அவர்கள் என்ன கெடுதல் செய்கிறார்கள்?" என்றார்.

“இவன் ஆகஸ்டு துரோகியல்லவா! இப்படித்தான் பேசுவான். அந்தப் பயல்களெல்லாம் கூடிக்கொண்டு நம்மை