பக்கம்:எக்கோவின் காதல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல்

✽ கவியரசர் முடியரசன்

121

இதோ! இதையும் படியுங்கள்! என்றேன்.

'அது என்ன ..?'

'அழகின் சிரிப்பா -?'

'ஆம்! உன் ஒவ்வொரு அங்கங்களிலும் ஓடி விளையாடும் அழகின் சிரிப்பிலே நான் மயங்கி விட்டேன். அதை நீ உணரவே இதைப் பொறுக்கி எடுத்துத் தந்துள்ளேன்' என்று கூறினேன். அவளிடமன்று; மனத்திற்குள்ளே.

மறுநாள் உன் சிரிப்பிலே மயங்கிய எனக்கு 'முத்தந் தரமாட்டாயா? என்ற கருத்தை உட்கொண்டு 'எதிர்பாராத முத்தம்' என்ற புத்தகம் தந்தேன். அதன் பின்னர், உன் அன்பைப் பெறாது கலக்கமடைந்த எனக்கு அமைதி தரமாட்டாயா-? அமைதி பெற நான் உயிர் வாழ ஒரு நல்ல தீர்ப்பைக் கூறமாட்டாயா? என்ற கேள்விகளைக் கேட்கவேண்டும் அவளிடம் என்று துணிந்த பின்பும், மனம் வரவில்லை சரி! நமக்குத்தான் புத்தகம் இருக்கிறதே, அதன் மூலம் கேட்டு விடலாம் என்ற நோக்கத்தான் 'அமைதி', 'நல்ல தீர்ப்பு' என்ற இரு நூலையும் அவளிடம் கொடுக்கத் தூண்டிற்று.

இப்படி எத்தனையோ புத்தகங்கள் கொடுத்தேன். ஆனாலும் முதல் நாள் பார்த்த பார்வையிலிருந்து கொஞ்சமாவது மாற்றமடையவில்லை. அதே அமைதிதான் நிறைந்திருந்தது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரே ஒரு புத்தகம். அவள் என் குடும்பத்தில் ஒரு மணி விளக்காக