பக்கம்:எக்கோவின் காதல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

எக்கோவின் காதல் ❖

கவிஞர் முடியரசன்

அவனுக்கு வந்தது. அடிபட்டுக்கிடக்கும் பொன்னம்மாளையும் சூழ்ந்து நிற்கும் கூட்டத்தையும் பார்த்தான்.

“ஐயோ! பொன்னம்மா உன் கதி இப்படியா ஆக வேண்டும். உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது நான்தானே! இந்தப்பழியை எப்படித் தொலைப்பேன்; உன் நினைவு என் குடும்பத்தில் என்றும் நின்று நிலைபெற ஒரே ஒரு வழி இருக்கிறது. என் தேவகிக்குப் பிறக்கும் குழந்தைக்கு உன் பெயரை வைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நான்? உன் குழந்தையை இல்லை - இல்லை நம் குழந்தையை நானே வளர்க்கிறேன். நீ என்ன எண்ணிக்கொண்டு இறந்தாயோ” என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.

திருச்சிராப்பள்ளி வண்டி வேகமாக உள் நுழைந்தது. அந்த வண்டியை நோக்கி விரைந்தான்.' ஆபீசுப் பையன் 'சார் சார்' என்று ஒடி வந்தான்; அரங்கசாமி திரும்பிப் பார்த்தான். தன் 'ஆபீசு'ப் பையன் தான் என்பதையறிந்து பதறிபோய் “என்னப்பா?' என்றான்!

'ஒங்களுக்குத் தந்தி வந்திருக்குங்க' என்று தந்தி ஒன்றைக் கொடுத்தான்.

"தந்தியா!” என்று அவசர அவசரமாகப் பிரித்துப் படித்தான்.

“Dhevahi Expired” என்று எழுதியிருந்த எழுத்துகள் மங்கலாகத் தெரிந்தன் கண்ணீர் நிறைந்த அவன் கண்களுக்கு.