பக்கம்:எக்கோவின் காதல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

41

வாங்கிக் கொண்டே 'திருமணம் செய்து கொண்ட பிறகு இப்படியெல்லாம் மாட்டேன் என்று சொல்ல முடியுமோ?' என்றேன்.

'பாரும்மா’ என்று சொல்லிவிட்டு ஓடி விட்டாள்.

'அத்தை! உன் பெண் என் வீட்டிற்கு வந்த பிறகு ஊர்மிளா என்ற பெயரை மாற்றி நல்ல தமிழ்ப் பெயராக வைத்துக் கொள்ளப் போகிறேன்.'

'அத்தான்! தமிழ்ப் பண்டிதர் குணத்தைக் காட்டி விட்டீர்களே என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே உள்நுழைந்தான் முருகன் - ஊர்மிளாவின் உடன் பிறந்தான்.

'ஆம் அப்பா! உங்கள் சொந்த மொழியில் பெயர் வைக்க வேண்டுமென்று சொன்னால் அது இழிவாகத்தான் தோன்றும்’

'விளையாட்டுக்குச் சொன்னேன் அத்தான். கோபித்துக் கொள்ளாதீர்கள், எழுந்திருங்கள், சாப்பிடலாம்'

உணவை முடித்துக் கொண்டு பலவாறு பேசிக் கொண்டிருந்துவிட்டு உறங்கச் சென்றேன்.

இரவு மாடியில் படுத்திருந்தேன். மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு உறக்கமே வரவில்லை, பல வகையான எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன.

மாடிப்படியில் யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டது. உற்றுக் கேட்டேன். ஏறி வருஞ் சத்தம் நின்றது. ஆனால் ஒருவரையுமே காணவில்லை. சிறிது நேரத்தில் எனக்குப் பக்கத்தில் ஒருவித சத்தம் கேட்டது. மிகமிகக் கூர்ந்து கேட்டேன். உஸ்ஸ் ...... உஸ்ஸ' என்ற சத்தம்.