பக்கம்:எக்கோவின் காதல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

புலப்பட்டிருக்கிறது. அது கீழே விழுந்தது, உட்கார்ந்தது போலத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அந்த 'உஸ்ஸ்' எப்படி வந்தது? மாடிப் படியில் சத்தங் கேட்டதே அது எப்படி வந்தது?

'ஏன் இப்படி ஒரு மாதிரி மிரள மிரள விழிக்கிறீர்கள்? என்னைக் கண்டு பயந்து விட்டீர்களா?'

'சேச்சே! பயமாவது ஒண்ணாவது' - என்று சொல்லிக் கொண்டே போய் அந்த வேட்டியை எடுத்து உதறினேன்.

உதறினேனோ இல்லையோ மூலையிலிருந்த உளுந்து மூட்டைக்குப் பின்னாலிருந்து இரண்டு பெருச்சாளிகள் 'உஸ்ஸ்’ என்று சத்தமிட்டுக் கொண்டே 'குடுகுடு' வென்று வெளியே ஓடின. உடனே படிகளிற் சத்தங்கேட்டது. அப்பொழுதான் என் 'பயம்' விட்டது.

மாடிப்படிகள் மரப்படியானதால் பெருச்சாளிகள் ஏறும்பொழுதும் இறங்கும்பொழுதும் அந்தச் சத்தம் கேட்டிருக்கிறது. ஊர்மிளா வந்து 'லைட்' போடாமல் இருந்தால் பெருச்சாளி, பேயாகி என்னைக் கொன்றிருக்கும். அறிவு வெளிச்சம் ஏற்பட்டால் அல்லவா அறியாமை இருள் நீங்கி உண்மை வெளிப்படும். அதை விடுத்து இருளில் அகப்பட்டுக் கொண்டு ஒன்றை மற்றொன்றாக எண்ணிக் கொண்டிருந்தால் மடியவேண்டியதுதான் என்ற 'சித்தாந்தம்' அந்த வெளிச்சத் திற்றான் எனக்கு ஏற்பட்டது.

வேட்டியைக் கொடியில் போட்டுவிட்டு வியர்வையையும் துடைத்துக் கொண்டு, 'ஊர்மிளா! வா! உட்கார்!' - என்று கையைப் பிடித்தேன்.

'ம்ம், தொடாதீர்கள் அத்தான்!' என்றாள்.