பக்கம்:எக்கோவின் காதல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூல், 1958 ஆம் ஆண்டுக்கு முன்னரே அச்சு வடிவம் பெற்றும், என்ன காரணத்தினாலோ, சென்னை, பீட்டர்சு சாலை, 'சண்டே டைம்ஸ்' என்ற அக்காலச் செய்தித்தாள்-அலுவலகத்திலேயே கட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் 1975 ஆம் ஆண்டு சென்னையிலிருந்த பொழுது, மேற்கண்ட 'சண்டே டைம்ஸ்' அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு அறையில், கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த எக்கோவின் காதல் கறையான்களுக்கு இரையாகியிருந்ததைக் கண்ணுற்றேன். அதில் தப்பிப்பிழைத்த ஒரிரு படிகளை மட்டும் கைப்பற்றிக் கொண்ர்ந்தேன். கொணர்ந்தும், மீண்டும் வெளியிட இயலாமல் அது தங்கி விட்டது.

தற்பொழுது என் தந்தையார் இயற்கையடைவிற்குப் பிறகு இந்நூல் வெளி வருகிறது.

இந்நூல் பரவினால், சிறுகதையுலகம் மீண்டும் சமுதாயச் சீர்திருத்தத்தை உள்ளடக்கிய கதைகளை அதிகம் தரும் என்று எண்ணுகிறேன்.

என்கோ(எந்தை)வின் மீதான் காதலால் இந்நூல் வெளிவர உதவிய பேராசிரியர் முனைவர் இரா. இளவரசு அவர்கட்கும், தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்மொழிக் காவலர், திரு. கோ. இளவழகன் அவர்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் தெரிவித்துக் கொள்கிறேன்.


19, மூன்றாம்.வீதி, அன்பன்,

காந்திபுரம், மு.பாரி

காரைக்குடி - 630 001.