பக்கம்:எக்கோவின் காதல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

"இல்லையே! நான் பார்க்கவில்லையே! என்று சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு அவள் திருட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது.

அட அசடே! உள்ளதைச் சொல்லு! இதிலென்ன விளையாட்டு, தங்கச் சங்கிலியல்லவா அது! என்றேன்.

"ஆம், நீங்கள் மட்டும் தங்கச் சங்கிலி போட்டுக் கொள்ளவேண்டும்; நான் போட்டுக் கொள்ளக் கூடாது. எத்தனை முறை உங்களைக்கேட்டேன் தங்க வளையல் வேண்டும் வேண்டுமென்று. அதைப் பற்றிய கவலை கொஞ்சங் கூட உங்களுக்கு இல்லையே. அதனால்தான் நான் அதை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறேன். என்றைக்கு வளையல் வருகிறதோ அன்றுதான் உங்கள் கடிகாரமும் வரும்” என்று சொல்லி விட்டுச் சமையல் அறைக்கு ஓடிவிட்டாள்.

"ம் ம் இருக்கட்டும். பெட்டியில் தானே வைத்திருப்பாள் என்று எண்ணி அவளுக்குத் தெரியாமல் சாவியை எடுத்து அவளுடைய பெட்டியைத் திறந்தேன். சில சீலைகளை எடுத்தேன். அடியில் கடிகாரம் இருந்தது. அதனடியில் சில கடிதங்களும் இருந்தன. எனக்குப் பல அய்யங்களை எழுப்பின அந்தக் கடிதங்கள். இவளுக்குக் கடிதங்கள் வரக் காரணம் என்ன? யார் எழுதியது? அதை ஏன் இவ்வளவு மறைவாகப் பத்திரப் படுத்தி வைக்கவேண்டும்? என்று எண்ணினேன்.

கடிதங்களைப் பிரித்தேன். சென்னை என்று எழுதியிருந்தது. உடனே இன்னும் என் கவனத்தைக் கவர்ந்தது எல்லாவற்றையும் எடுத்தேன். பிரித்தேன்.

அன்புமிக்க அம்மா?