பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

நான் சிறு பிள்ளையாக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது.அப்போது எனக்கு ஒரு வயது.என் தம்பிக்கும் அதே வயதுதான். என் தங்கைக்கும் அதே வயதுதான். நாங்கள் மூவரும் ஒன்றாகப் பிறந்தவர்களே!

ஒருநாள் மாலை நேரம். என் அப்பாவும் அம்மாவும் வேட்டையாடப் போயிருந்தார்கள். நாங்கள் மட்டுமே குகைக்குள் இருந்தோம். நான் என் தம்பியையும், தங்கையையும் பார்த்து,"எத்தனை நாளைக்குத்தான் இந்த இருட்டுக் குகைக்குள் அடைத்துக்கிடப்பது? இன்று நாம் வெளியிலே போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம். உம், புறப்படுங்கள்,போகலாம்"என்றேன். 1218–2