பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

நாளைக்கு எத்தனை மிருகங்களை அடித்துச் சாப்பிடுமோ!” என்றுதானே நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைப்பது தவறு.

சென்னையில் இருக்கிறதே மிருகக் காட்சி சாலை,அங்கே போய்ப் பாருங்கள்; உண்மை தெரியும். அங்கே உள்ள காண்டா மிருகத்திற்கு என்னென்ன உணவு கொடுக்கிறார்கள் என்று அங்கே ஒரு பலகையில் எழுதி வைத்திருப்பதாகக் கேள்வி.

200 பவுண்டு புல், 4 படி வெல்லம் கலந்த காரரிசி, 2 வீசை காரட்டு, உருளைக் கிழங்கு, வாழைப் பழம்—இவ்வளவும் தினசரி கொடுக்கிறார்களாம். மாமிசம் கொடுப்பதாக இருந்தால்,அதையும் எழுதி வைத்திருப்பார்கள் அல்லவா? நாங்கள் மாமிசம் சாப்பிட்டால்தானே அவர்கள் எழுதி வைப்பார்கள்?

என் உடம்பைப் பார்த்தால் இரும்புக் கவசம் மாட்டியிருப்பது போல் தோன்றுகிறதல்லவா? உடம்பெல்லாம் குமிழ் குமிழாகவும் இருக்கிறது. ஆப்பிரிக்கக் காண்டா மிருகத்திற்கு என் உடம்பில்