பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

உங்களில் யாராவது நெட்டையாக வளர்ந்திருந்தால், “அவனைப் பாரடா.ஒட்டைச் சிவிங்கி மாதிரி இருக்கிறான்!” என்று கிண்டல் செய்கிறீர்கள். ஆனால், என் உயரம் வளர எவராலுமே முடியாது. ஆமாம், உலகத்திலே உயரமான மிருகம் நான்தானே! கால் முதல் தலை வரை அளந்து பாருங்கள். சரியாகப் பதினெட்டு அடி இருப்பேன். என் கன்னத்திலே நீங்கள் அன்பாகத் தட்டிக் கொடுக்கவேண்டுமானால், முதலிலே ஒரு பெரிய ஏணியைத் தேடிப் பிடிக்கவேண்டும்!

மிகவும் உயரமாக இருப்பதால், மரத்திலுள்ள இலைகளைப் பறிப்பது எனக்கு மிகவும் சுலபம். அது மட்டுமா? எதிரிகள் துாரத்தில் வரும்போதே