பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

வேட்டையாடுகிறார்கள், தெரியுமா ? எங்களுடைய தோலும், உரோமமும் அவர்களுக்கு மிகவும் பயன்படுகின்றனவாம்.

எங்களுடைய தோல் மிகவும் உறுதியாயிருக்கும். 2 அங்குல கனம் வரை வளரும். இந்தத் தோலால் பலர் கவசம் செய்து போட்டுக் கொள்கிறார்களாம். உரோமத்தால் அழகான வளையல் செய்வார்களாம். அந்த வளையல் ஒரு முக்கியமான வேலையைச் செய்யுமாம்.

ஆப்பிரிக்காவில் சில பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே, அவன் எங்களுடைய உரோமத்தால் செய்த வளையலை அவளுக்குக் கொடுத்து அனுப்புவானாம். அவள் அதை அப்படியே திருப்பி அவனிடம் அனுப்பினால், “சரி, நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்” என்று அர்த்தமாம்.

அவர்கள் மணம் நடைபெற, நாங்கள் மரணம் அடைய வேண்டுமாம் ! இது என்ன நியாயம் ?