பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ஓரடி அதிகமாகவே இருக்கும். நாங்கள் பத்தரை அடி உயரம் வளர்ந்தால், அவை பதினொன்றரை

அடி உயரம் வளரும். துதிக்கை நுனியில் எங்களுக்கு ஒரு விரல்தானே இருக்கிறது? ஆனால், அதற்கு இரண்டு விரல்கள் உண்டு. எங்களில் ஆணுக்கு மட்டும்தான் தந்தம் இருக்கும். ஆனால் ஆப்பிரிக்காவில் ஆண், பெண் இரண்டுக்குமே தந்தம் உண்டு. தந்தம் இல்லாத பெண் யானையை அங்கே அபூர்வமாகத்தான் காணலாம்.அவைகளின் தந்தங்கள் எங்களுடைய தந்தங்களைவிட நீளமாகவும்,கனமாகவும் இருக்கும்.

தந்தத்தைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால்,இதற்கு ஆசைப்பட்டுத்தானே நீங்கள் எங்களை வேட்டையாடுகிறீர்கள்? இந்தத் தந்தத்தால் எத்தனையோ சாமான்களைச் செய்கிறீர்கள். எல்லாம் விலை உயர்ந்த சாமான்கள்!அழகான சாமான்கள்!