பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24. கைத்தொழில்

கைத்தொழில் கற்றிட வேண்டும்-அதை
நித்தமும் போற்றிட வேண்டும்.

கைத்தொழில் இல்லாத நாடு-புலி
கரடிகள் வாழ்கின்ற காடு.

மெத்தவும் சுற்றிடல் ஏனோ?-உயர்
மெத்தையில் தூங்கிடத் தானோ?

எத்துணைப் பேர்கல்வி கற்றார் :- இங்கே
என்ன நம் நாட்டினர் பெற்றார் !

பட்டங்கள் பெற்றிடப் போவார் - சிறு
பாயும் முனைந்திட லாகார்.

சின்னஞ், சிறுவரே, நீரும் - அவர்
செல்வழி| போகாதீர் வாரும்.

25