பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32. என் விருப்பம்

காலையில் எழுவேன்; கடவுளைத் தொழுவேன்;
      கருத்துடன் படிப்பேனே ;
வேலைகள் என்றன் பெற்றோர் இடுமுன்
      விருப்புடன் புரிவேனே. 1

கூழே எனினும் குறைகூ றாமல்
      களிப்புடன் உண்பேனே :
ஏழை எளியோர் ஏக்கம் கண்டால்
      இன்புடன் தீர்ப்பேனே. 2

பொன்னே தரினும் பொய்பே சாமல்
      புகழே பெறுவேனே ;
என்னால் ஆகா தென்றே எதற்கும்
      ஏங்கித் தளரேனே. 3

கல்விச் சாலை சென்றே கற்கக்
      காலந் தவறேனே;
சொல்லும் பாடம் யாவும் கேட்டே
      சொகுசாய்க் கற்பேனே. 4

வயதில் பெரியோர் வருதல் கண்டால்
      வணக்கம் புரிவேனே ;
நயமே பேசி நன்மை நாடி
      நலமாய் வாழ்வேனே.5