பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பச்சைச் செடியில் நான்பிறந்தேன்-உயர்
      பருத்திக் காயினுள் நான்இருந்தேன் ;
மெச்சும் வகையில் நான்வளர்ந்தேன்.-மிக
மேன்மையும் வெண்மையு மாய்த் திகழ்ந்தேன்.

என்னை வெளியில் எடுத்து விட்டார்-இங்கே
ஏற்றபடி யெல்லாம் செய்துவிட்டார்;
அந்நிய நாடுகள் சென்றலைந்தேன்-அங்கே
ஆலை பலவும்நான் கண்டறிந்தேன். 2

பஞ்சுமெத் தைகளும் தலையணையும் கொண்டு
பாலர்கள் தூங்குவ தென்னாலே;
கஞ்சியில் லையென்போர் கைராட்டையால்-தினம்
கொஞ்சி மகிழ்வதும் என்னாலே
. 8