பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

39. கற்றது கைம்மண் அளவு

ஆதி நாளில் அவ்வை என்னும்
      அரிய கிழவி இருந்தாள் ;-அவள்
ஒதி ஓதி உலகில் உள்ள
      உண்மை பலவும் தெரிந்தாள்.1

கற்று வல்ல புலவர் பலரும்
      கைகள் கூப்பித் தொழுவார்-'இவள்
பெற்ற பேறு யாவர் பெறுவார் ?'
      என்று கூறிப் புகழ்வார்.2

ஒருநாள் அவ்வை ஊர்கள் பலவும்
      உழன்று வருந்தி இளைத்தே-வழி
வருவாள் அவளோர் வனத்தின் இடையே
      வந்து மிகவும் களைத்தே,3
51