பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருகே இருந்த அரிய நாவல்

மரத்தின் நிழலை அடைந்தாள்;-நீர்

பருக வேண்டிப் பலவும் எண்ணிப்

பெரிதும் உள்ளம் உடைந்தாள். 4


மரத்தின் மேலோர் சிறுவன் கனிகள்

பறித்தல் கண்டு மகிழ்ந்தாள் ;-அவள்

உரத்துக் கூவித் தனக்கும் சிறிதே

உலுக்கிப் போடப் புகழ்ந்தாள். 5


'சுட்ட பழமோ? சுடுதல் இல்லாப்

பழங்கள் தரவோ? சொல்லாய்-நின்

இட்டம் உரைப்பின் ஈவேன் உனக்கே

இயம்ப வேண்டும் நல்லாய். 6


சிறுவன் கூறும் சொல்லின் பொருளைச்

சிந்தை செய்ய லானுள்;-பொருள்

அறியா ளாகி ஐயம் தீரும்

வகையில் வினவ லானுள். 7


'சுடுதல் இல்லாக் கனிதா என்றே

சொல்லி முடிக்கு முன்னே-அவன்

கடிதே கிளேயைக் குலுக்க உதிரும்

காயும் கனியும் என்னே ! 8


நாவல் மரத்தின் ந்லமார் கனிகள்

நிலத்தில் இருத்தல் கண்டாள்-நீர்

ஆவல் மிகுந்த அவ்வைக் கிழவி

அகத்தில் மகிழ்வு கொண்டாள்.

52