பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பால குமரன் பரிவுடன் அன்னையைப்

பணிந்திடச் சென்றனனே !

நீல விழியினில் நீர்வடித் தன்னை

நின்றிடக் கண்டனனே ! 2


  • அன்னாய்! அன்னாய்! அழுகையின் காரணம்
அறைகுவை,’ என்றனனே :
  • பொன்னே, கண்ணே புகலுவன்,” என்றே
பூவை நவின்றனளே : 3


டில்லியின் மன்னவன் தெய்வக் குதிரையைத்

தேடிப் பெற்றனனும் ; H.

வல்லவர் வந்ததை வகைபெற ஒட்டிடப்

பந்தயம் வைத்தனனும் ; 4


நல்லது குதிரையை நான் அடக் குவனென

நாடினர் உன் தந்தை ;

சொல்லிட மனமிலை சூழ்ந்தனர் சிறை, யெனச்

சோர்ந்தனள் நல்லன்னை . 5


"ஆஹா' என்றே அலறி எழுந்தான்

அஞ்சா ஜயசிங்கன் ;
  • வேகக் குதிரையை வெல்வேன்,' என்ருன்
வீரன் ஜயசிங்கன். 6


“ அந்தோ குழந்தாய்! ஆகா துன்னுல் ’’

என்ருள் அன்னேயுமே.

தந்தை இகழ்வைத் தநயன் தீர்ப்பேன்

தாயே மன்னியுமே ’’ 7


என்றே இளைஞன் அன்பால் இயம்பி

இனிதே வணங்கினனே:

அன்றே அவளும் ஆசிகள் கூறி

அனுப்பிட இணங்கினனே. 8

56