பக்கம்:எங்கே போகிறோம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலட்சிய சமுதாயம் O 133

“உடைமைக்கு ஊழே காரணம்” என்ற சித்தாந்தம் மக்களின் மூளையில் இடம்பெற்றுள்ளவரை, மக்கள் தங்களிடம் பொருளின்மை அல்லது உடைமையின்மை குறித்து வருந்தமாட்டார்கள்!

நமது நாட்டில் ஏழ்மை, வறுமை இன்று நேற்றுத் தோன்றியதல்ல, பன்னூறாண்டுகளுக்கு முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக வறுமையும், ஏழ்மையும் தொடர்ந்து வருகின்றன. இதற்கு என்ன மாற்று? முதல் மாற்று கூட்டுடைமைச் சமுதாய அமைப்பு அல்லது கூட்டுறவுப் பொதுநலச் சமுதாய அமைப்பு.

கம்பன், “எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாம்” என்று ஒரு இலட்சியப் பொருளாதார சமுதாயத்தைக் காண்கிறான். “உடைமையைப் பொதுமை செய்!” என்றான் பாவேந்தன் பாரதிதாசன். நமது பொருளாதாரம் கடன் பொருளாதாரமாக அமையக் கூடாது; உற்பத்திப் பொருளாதாரமாகவே இருக்க வேண்டும்.

தனியார் துறை கட்டுப்படுத்தப்படுதல் வேண்டும். பொதுத் துறையையும், கூட்டுச் சமுதாய அமைப்புப் பொருளாதாரத்தையும் பேணி வளர்க்க வேண்டும். துறைதோறும் தன்னிறைவு காணவேண்டும். மக்களுக்கு இலவசம், இனாம் தருவது கூடாது. தூறலால் பயிர் விளைந்துவிடாது. அதுபோலச் சலுகைகளால் மக்கள் வளர்ந்துவிட மாட்டார்கள்.

ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவுள்ள குடும்பமாக அமையவேண்டும்; வளரவேண்டும். நாடு, நாடா வளத்ததாக அமையவேண்டும். ஒவ்வோர் இளைஞனும் சுய முயற்சியில் பொருள் ஈட்டி, அப்பொருளால் தானே முயன்று கட்டிய வீட்டில் குடியிருக்க வேண்டும். தான் ஈட்டிய பொருளில் பலரோடு கூடி உண்ணவேண்டும்.