பக்கம்:எங்கே போகிறோம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருளாதாரச் சிந்தனைகள் O 77

நமது நாட்டில், தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு சரி செய்யப்பட்டால்தான், வேலைவாய்ப்புக்களும், வருவாயும் பெருகும். இத்துறையில் நமது அரசுக்கும் சரி-இளைஞர்களுக்கும் சரி-சமூகத்திற்கும் சரி-போதுமான ஆர்வம் இல்லாதது வருந்தத்தக்க செய்தி.

பல நூறு ஆலைகள் பூட்டப்பட்டுள்ளன. எண்ணற்றோர் வேலைகளை இழந்துள்ளனர். எதிர்பாராத நிலையில் நலிந்துபோன தொழில்களைப் புனரமைக்க அரசுகளும், வங்கிகளும், மூலதனத்துடன் முன்வர வேண்டும். நிர்வாகக் குறையின் காரணமாகத் தொழிற் சாலைகள் நலிவுறின் அந்தத் தொழிற் சாலைகளின் நிர்வாகிகள் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

இன்றுள்ள நடைமுறையில், நிர்வாகி வசதியாக இருக்கிறார். ஒரு பைசாக் கூடக் குறையாமல் ஊதியம் வாங்குகிறார். ஆனால் பாவம், தொழிலாளர்கள் வேலையை இழந்து தவிக்கின்றனர். தொழிற் சங்கங்களும் கூட இந்த மாதிரி விஷயத்தில் பேச போதிய முயற்சிகள் எடுக்காதது ஒரு குறை. இந்த வகையில் நமக்கே சொந்த அனுபவம் உண்டு.

இன்று கூட்டுறவுத் துறை “அஞ்சூரான், புஞ்சை போல” என்பார்களே அதுபோல, நலிந்து வருகிறது. இந்தியாவின் சாதாரண மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு, கூட்டுறவே சரியான வழி. ஆனால் கூட்டுறவு இன்று செப்பமாக இல்லை.

எந்த ஒரு தனி மனிதனும் சரி-அல்லது சமூகமும் சரி-அறிந்து பாவம் செய்ய உடன்பட மாட்டார்கள். அதுபோலவே மக்கள் வேலையில்லாத திண்டாட்டத்தையும் விரும்பவில்லை. புதிய தொழில் ஆலை, வேளாண்