பக்கம்:எங்கே போகிறோம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

உலக மக்கள் அனைவரும் மகிழ்வான வாழ்க்கையையே விரும்புகின்றனர். அவ்வாறு விழைவதே உலக இயல்பு. உலக மக்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் நல் ஒழுக்கங்களைக் கொண்டு ஒழுகினால், உலக உயிர்கள் அனைத்துமே மகிழ்வாக வாழும் பேற்றினைப் பெறும்.

பால் நினைந்தூட்டும் தாயினும் பரிந்து, அறிவியல் உணர்வினை அருளும் தவத்திரு அடிகளார். அவர்கள் மதுரை வானொலி வழி வழங்கிய அருட்கொடையே ‘எங்கே போகிறோம்’ என்னும் இந்நூல்.

தவத்திரு அடிகளார் அவர்கள் இறையருளாலும் தவத்தின் சிறப்பாலும், பன்னூல் புலமையாலும் வழங்கிய அரிய கருத்துக் களஞ்சியம், இன்றைய மக்கட் சமுதாயத்திற்கு மிகவும் பயன் தரும் எனில் மிகையன்று. -

உலக அரங்கில் தமிழகம் தலைசிறந்து விளங்கச் செய்வதே நாம் தவத்திரு. அடிகளார் அவர்களுக்குச் செய்யும் சிறந்த கைம்மாறாகும்.

உலகெலாம் ஒருமைப்பாடும் பண்பாடும் திறந்து விளங்க துணையாகச் செயலாற்றி மகிழும் உழுவலன்பு நண்பர் மரு. பரமகுரு அவர்கட்கு என் இதய நன்றி.

அணியென அணிந்துரை அளித்து மகிழும் முன்னைத் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர், த. பெரியாண்டவன் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி.

தமிழ்கூறும் நல்லுலகம் இவ் அரிய நூலை பயன் கொண்டு மகிழ கலைவாணியின் திருவருளை வேண்டுகிறேன்.

சென்னை-17
26-12-94

என்றும் அன்புடன்,
சீனி. திருநாவுக்கரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எங்கே_போகிறோம்.pdf/9&oldid=1126190" இலிருந்து மீள்விக்கப்பட்டது