பக்கம்:எச்சில் இரவு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16


ஆலமரம் உறங்கிக் கொண்டிருந்தது. அடிமரத்தில் வண்டுகள் உறங்கிக் கொண்டிருந்தன. அவன் மடியில் அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்.

பராசர முனிவருக்கும் மச்சகந்திக்கும் சிறிய படகொன்று, படுக்கை அறையாகப் பயன்பட்டது போல, ஆதிக்கும் பகவனுக்கும் இலுப்பைத் தோப்பொன்று இன்ப விடுதியாக இருந்ததுபோல, அவனுக்கும் அவளுக்கும் அந்த மரகதச்சோலையே அப்போது மஞ்சமாகப் பயன்பட்டது.




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/26&oldid=1245104" இலிருந்து மீள்விக்கப்பட்டது