இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுடாத இரவும்
தொடாத உறவும்
ஞாயிற்றுக் கிழமை இரவில், திங்கள் வந்தது.
தேய்ந்து வளர்ந்த அத்திங்களைக் கண்டு, செவ்வாய்த்
தாமரைகள் அழுது கொண்டிருந்தன. அரக்காம்பல்
என்னும் அல்லிகள் அப்போது சிரித்துக்கொண்டிருந்தன.
அந்த ஊரும், தடாகத்திலுள்ள நீரும்; கலப்பைகள் உழுதுவைத்த சேறும், இரவு நேரத்தில் ஒற்றுமையாக உறங்கிக் கொண்டிருந்தன. ஆனால், அவள் மட்டும் உறங்கவில்லை.
சுடாத இரவும், இரண்டு நாட்களாகத் தொடாத உறவும், அவளுடைய இளமை உணர்ச்சிகளை எழுப்பி விட்டதால், உள்ளத்தில் ஏக்கமும், ஏக்கம் வந்ததால் அவளுக்குத் தூக்கமும் வரவில்லை.
அக்காள் தங்கையோடு பிறக்காத அந்த அழகு நிலா, அப்போது அவள் வீட்டுக்கு நேராக வந்து, அவளுடைய பருவ முகத்தைப் பார்த்தது. அண்ணன் தம்பிகளோடு பிறந்த அவள், அந்த அழுக்கு நிலவை அண்ணாந்து பார்த்தாள்.
2289—2