பக்கம்:எச்சில் இரவு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19


அவன் தன்மையாகவும்

அவள் முன்னிலையாகவும்

அவன் மோனையாகவும்

அவள் எதுகையாகவும் அப்போது இருந்தனர்.

"களைத்திருப்பவர்களுக்கு, வழி பெருந்தூரமாக இருக்கிறது” என்று அவன் சொன்னான்.

“விழித்திருப்பவர்களுக்கு இரவு மிகவும் நீண்டிருக்கிறது” என்று அவள் சொன்னாள்.

"இந்த நள்ளிரவில் நாம் மட்டும்தான் விழித்துக் கொண்டிருக்கிறோம்” என்றான்.

"ஏன்? நம்மைப் போலவே கள்வர்களும் விழித்துக் கொண்டிருப்பார்கள்” என்றாள் அவள்.

கள்வர்கள் விழித்துக் கொண்டிருப்பது——திருடுவதற்காக!

காதலர்கள் விழித்துக் கொண்டிருப்பது——தீண்டுவதற்காக!

திருடுவது குற்றமாகும்;

தீண்டுவது சுற்றமாகும் என்றான் அவன்.

“ஆரணங்கைத் தீண்டுவதும்

ஆண்டவனை வேண்டுவதும்——அவரவர் சுயநலத்திற்காகத்தான்” என்றாள் அவள்.

“அன்றாடம் நாம் சந்திப்பதும் அதற்காகத்தான்” என்றான் அவன்.

அவள் சிரித்தாள். அவளுடைய பல்வெளிச்சத்தைக் கண்டு, பால்நிலா வெளிச்சம் வெட்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/29&oldid=1245109" இலிருந்து மீள்விக்கப்பட்டது