இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
- கிரேக்கர்கள் ஒலிவ மலரையும்;
- உரோமானியர்கள் முந்திரி மலரையும்
- மிகவும் விரும்புவார்களாம்” என்றான் அவன்.
“ஆனால், நானே, கவர்ச்சிமிக்க கனகாம்பரத்தை விடக் காயாம் பூவைத்தான் மிகவும் விரும்புவேன்” என்றாள் அவள்.
“ஓகோ! விரைவில் நீ ஒரு தாயாக விரும்புவதால் தான், காயாகும் பூவாகிய அந்தக் காயாம்பூவை விரும்புகிறாய் போலிருக்கிறது” என்றான் அவன்.
அவள் புன்னகை புரிந்தாள்!
இலைகள் உண்டாக்கிய இருட்டில், அவர்கள் இருவரும் நெருங்கி நின்று, தங்கள் கரங்களைச் சேர்ததனர். ஒருவரை ஒருவர் போர்த்தனர். சிறிது நேரத்தில் இருவரும் வேர்த்தனர்.
______