பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23



பல கடிதங்கள் எழுதியும் பணமும் வரவில்லை;பதிலும் வரவில்லை; காரணம் என்னவென விளக்கவும் இல்லை. 31-3-22க்குள் தங்கள் பணம் வராவிட்டால் நானே வசூலுக்காக நேரில் வர நேரிடும்; வந்தால் செலவுத் தொகை தங்களைச் சாரும்.

அன்புள்ள,
கி. ஆ. பெ. விசுவநாதம்
34-3-22

தங்களிடமிருந்து பதில் வராததால் நான் நேரில் அவ்விடம் வசூலுக்காக 3 ஆம் தேதி காலை வந்து சேருவேன்.பாக்கிப் பணத்தைத் தயாராக வைத்திருக்கவும்.

அன்புள்ள,
கி. ஆ. பெ. விசுவநாதம்
7-4-22

சலாம்! நான் அவ்விடம் வந்திருந்தபோது தாங்கள் விவசாய சம்பந்தமாகக் கிராமத்திற்குப் போயிருப்பதாகவும், வந்தவுடனேயே பணம் அனுப்பி விடுவதாகவும் தங்கள் கணக்குப் பிள்ளை சொல்லி அனுப்பியபடி இன்று வரை தொகை வரவில்லை. தயவு செய்து உடனே அனுப்பித் தேவைக்கு ஆர்டர் செய்ய வேண்டுகிறேன்.

அன்புள்ள,
கி. ஆ. பெ. விசுவநாதம்
14-4-22

சலாம்! நான் அங்கு வந்திருந்த சேதியைக் கணக்குப்பிள்ளை மூலம் அறிந்திருக்கலாம். என் 7 ஆம் தேதி கடிதம் கிடைத்திருக்கலாம். இன்னும் தொகை வர்வில்லை.நெடுங்காலமாக நாணயத்தைக் காப்பாற்றிவந்த தாங்கள் இப்போது இவ்வாறு நட்ப்பது எனக்குப் பெரிதும் வியப்பை ஊட்டுகிறது, தயவு செய்து பணத்தை அனுப்பி மறுவேலை பார்க்கவும்.

அன்புள்ள,
கி. ஆ. பெ. விசுவநாதம்
21-4-22